கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய புதுமுக நடிகை!!


 தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், விஜய் சேதுபதியின் ரீல் மகள், தன் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

தெலுங்கில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு, தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக நானி, மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், நடிகை கீர்த்தி ஷெட்டி, தன் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.