கடனை கேட்க சென்றவர் மீது கொலை வெறி தாக்குதல்!
யாழ்.கோண்டாவில் கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
கடனை கேட்க சென்றவர் மீது, தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை