ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபாய!!


உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, முன்னரைப் போலவே பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இது அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்காகக் கொண்டதாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறும் தாம நினைவூட்ட விரும்புவதாக ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.