மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

 


நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கமைய மாத்தறை மாவட்டத்தின் உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட கிராம சேவகர் பிரிவின் மலபட வத்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தின் நரந்தானை கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் அதிகாப்பிரிவுக்கு உட்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.