சடலம் ஒன்று தலைமன்னார் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது!!
தலைமன்னார் கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின்மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை அடையாளம் காண்டுள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பாக கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தலைமன்னார் பொலிஸார் குறித்த தீடைப்பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை