கடலுக்குச் சென்ற இளைஞனைக் காணவில்லை!!

 




மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  நண்பகல் வேளையில் தனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள நரிப்புல் தோட்ட ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அதே வேளை மீன் பிடிக்கச் சென்ற குறித்த இளைஞனுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும், வலிப்பு நோய் ஏற்பட்டதன் விளைவாக இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் சிலர் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.