பொலிஸ், இராணுவம் முல்லைத்தீவில் குவிப்பு!!

 


முல்லைத்தீவு - கேப்பாபிலவு விமானப்படை முகாமிற்கு செல்லும் வீதி முழுவதும் இராணுவம், விமானப்படை, பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் முள்ளியவளையிலிருந்து - புதுக்குடியிருப்பு செல்லும் வீதிகள் தோறும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

சில தினங்களின் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைபடுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் தடுத்து வைக்கபட்டுள்ளதை கண்டித்து முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் பொலிசார் விமானப்படையினர் இராணுவத்தினர்,புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு சுகாதார பகுதியினை சேர்ந்த சுகாதர பரிசோதகர்களும் விமானப்படை முகாம் முன்பாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.