நெல்லியடி பொலீஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு- மக்களின் வேண்டுகோள்!!

 


நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நெல்லியடி பொலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த திங்கட்கிழமை நெல்லியடி கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் அதிகாலை 2 மணியளவில் முன் கதவு பூட்டினை உடைத்து உள் நுழைந்த திருடன் மருந்தகத்தில் வைக்கப்பட்ட பணம் மற்றும் விலை உயர்ந்த மருந்துப் பொருட்களையும் திருடிச் சென்றுள்ளான். 

கடையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட திருடன் மருந்தகத்தில் இருந்த குளிர்பானம் ஒன்னை தனது முகக் கவசத்தை நீக்கி குடிக்க முற்பட்ட போது அவரின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது.  திருடனை பிடிப்பதற்கான விசாரணையை துரிதப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல் நேற்று கரவெட்டி கிழக்கு பகுதியில் வசிக்கும் அஞ்சல் அதிபர் ஒருவரின் வீட்டில் புகுந்த திருடனை பிடிக்க முற்பட்ட போது அஞ்சல் அதிபரின் கையில் கத்தியால் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான். குறித்த வீட்டில்  திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.