வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பதவியேற்பு!


வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் அவர் முன்பு ஏற்றிருந்த பொறுப்புக்களை கையளித்த பின்னர் இன்று   கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதமசெயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வவுனியா மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

இதேவேளை  வடக்கு மாகாணத்தின் ஆட்சிமொழியாக தமிழ் காணப்படும் நிலையில் தமிழ்மொழி தெரியாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.