ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ள பாரிய குற்றச்சாட்டு!!

 


குற்றவாளிகளை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என ஓமல்பே சோபிததேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தவேளை சிறுமி உயிரிழந்தமை குறித்த விபரங்களையும் அதனுடன் தொடர்புபட்ட சம்பவங்களையும் மூடிமறைப்பதற்கு அனுமதிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொலிஸார் மற்றும் ஏனைய அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என ஓமல்பே தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் கொலைகாரர்கள் திருடர்கள் நாடாளுமன்றத்தை தங்கள் அதிகாரத்திற்கான இடமாக மாற்றியுள்ளதாக தெரிவித்த தேரர், ரிசாத்பதியுதீன் போன்றவர்கள் தொடர்ந்தும் நாடாளுமன்ற கடமைகளை நிறைவேற்ற அனுமதிப்பது குறித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்படவேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.