அவ்வை சொல்-மழலையர் கவிதை!!
இருக்கும் செல்வம் நமக்கேஎன்றால் தவறும் கணக்கே
பெருக்கும் அன்பை தர்மம்
பிழைகள் கழிக்கும் மர்மம்
வகுக்கும் நல்ல வழிகள்
வளர்க்கும் கூட்டல் வாழும்
மிகுக்கும் நன்மை போற்றும்
மீண்டும் மீண்டும் காட்டும்
வணக்கம் என்ற சொல்லும்
வரவாய் தர்மம் ஆகும்
வாழ்த்து கூறும் மனமும்
வலிவில் மடங்கில் உயரும்
எனக்கும் உனக்கும் அவ்வை
எடுத்துச் சொன்ன சொல்லை
ஏற்று அறம் செய விரும்பு
இதயம் இனிக்கும் கரும்பு!
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை