மாகாணங்களுக்கிடையான பொதுப்போக்குவரத்துக்கு தடை!!

 


மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இரு வார காலத்திற்கு நிறுத்தப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இந்த இடைநிறுத்தமானது நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் பயணத் தடை நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை இன்றுவரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பொது போக்குவரத்தை செயல்படுத்த மாத்திரமே பயணத் தடை ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பொது மக்களுக்கான பயணத் தடை நடைமுறையில் உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.