சிவகார்த்திகேயன் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

 


நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன்.

இவர் தனது உறவினரான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் பிள்ளை உள்ளது.

இந்த நிலையில் ஆர்த்தி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை சிவகார்த்திகேயன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் தந்தையான தாஸ் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரே தனக்கு மீண்டும் மகனாக பிறந்துள்ளார் என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.