அதிகரித்தது மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள்!!
மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்கப்படவுள்ளன.
அதன்படி, இன்று முதல் 103 ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இன்று அதிகாலை 50 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.
அத்தோடு, பிற்பகலில் மேலும் 53 ரயில் சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை