வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி!!
உயர்கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு பதிவு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசியைப் பெற விரும்பும் மாணவர்கள், கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் www.army.lk/covid19 வழியாக “முன்-புறப்படுதல் VACCINATION-STUDENTS” ஐ அழுத்தி பதிவு செய்தல் இன்று முதல் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதிவுசெய்ததும் இரண்டு நாட்களுக்குள் ஒரு நபர், தடுப்பூசி டோஸை பெறுவதற்கான திகதி, நேரம் மற்றும் தொடர்புடைய தடுப்பூசி மையம் தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மூலமாக பெறுவார்கள் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை