தடுப்பூசிக்கு இல்லாமல் தமிழகத்தில் தட்டுப்பாடு!!

 


தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தடுப்பூசிக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் ஏமாற்றமடைந்தமையால் பல இடங்களில் இது தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

45 மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி இருப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை ஒரு கோடியே 46 இலட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் பெறப்பட்டதில் ஒரு கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்திற்கு பிறகு , 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.