புதிதாக பரவும் வைரஸ் திரிபு!!
தற்போது உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபை விட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் இந்த வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதுடன் இந்த கொரோனா வைரஸ் திரிபுக்கு லெம்டா என பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வைரஸ் திரிபு தொடர்பிலான ஆய்வுகளை சர்வதேச சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புதிய வகை திரிபு பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இதனை தடுக்க இலங்கை எச்சரிக்கையாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே முகக்கவசம் அணிவது மற்றும் சமூக தொலை தூரத்தை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
மேலும் பிரித்தானியாவில் மெதுவாக பரவத் தொடங்கியிருக்கும் 'லாம்ப்டா' கொரோனா சற்று மாறுபாடான ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை