ஜனாதிபதி படுகொலையில் ஒரு குழுவுக்கு தொடர்பு!!


ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 28பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த 28பேரில் 26பேர் கொலம்பியாவையும், 2பேர் ஹெய்டி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள்.

அத்துடன் இந்த 28பேரில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 3கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். எஞ்சிய 8பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது’ என கூறினார்.

இதற்கிடையே ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்டதையடுத்து நாட்டில் தற்போது தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் ஹெய்டியில் பொலிஸ், அதிகாரத்தை இராணுவம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

முன்னதாகவே இந்த படுகொலை சம்பவத்தின் போது, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலைக்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.