ஒலிம்பிக் தொடரில் டோக்கியோவில் அவசரநிலை!!


ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்குமென ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் திரிபுகளின் விளைவுகளை கருத்தில் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காகவும், நாம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக டோக்கியோவில் அவசர நிலை அமுலில் இருக்கும்’ என கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை இந்த அவசரநிலை அமுலில் இருக்கும்.

இந்தத் திகதிகளில் உணவகங்களிலும் மதுபான விடுதிகளிலும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே மூடப்பட வேண்டும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த கடினமான முடிவை எடுக்க அரச அதிகாரிகளும் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டித்தொடர், எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஒகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.