மத்திய அரசு தோல்வியை ஒப்புக்கொண்டது!!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரவை மாற்றி இருப்பதன் மூலம் கொரோனா மேலாண்மையில் ஏற்பட்ட தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டால், அதற்கான பெருமையை தான் ஏற்பதும், தவறு நடந்தால் அமைச்சர்களை காரணம் காட்டுவதும், பிரதமர் மோடியின் வழக்கமாகிவிட்டது.
கொரோனா நிர்வாகத்தில் தோல்வியடைந்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இராஜினாமா செய்துள்ளார். நடந்த தவறுகளுக்கு, ஹர்ஷ்வர்தன் பலிகடாவாக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை