பதவி விலகினார் ஜெஃப் பெசோஸ்!!


அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், தனது பதவியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை நிறுவிய அதே திகதியில், அதாவது நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை துறந்தார்.

இதன்பிறகு கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் முழு நேரமும் கவனம் செலுத்தவுள்ளார்.

இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார்.

உச்சம் தொட்ட ஒன்லைன் வர்த்தகம் ஆரம்ப காலத்தில் ஒன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.