வாள்வெட்டுக்குழு அராலியில் அட்டகாசம்!


யாழ்ப்பாணம்- அராலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புகுந்து, வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.45 மணியளவில்,  2 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர், வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடி ஆகியவற்றினை உடைத்து, முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதன்போது விழித்துக்கொண்ட வீட்டுக்காரர்களும் அயல்வீட்டினரும் இணைந்து துரத்தியபோது அவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார்  முறைப்பாடு பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.