கிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி வவுனியாவில் கையெழுத்து போராட்டம்!


முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி கிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி, கையெழுத்து போராட்டமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்ப்பாட்டில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி குறித்த கை எழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

மேலும் நாடு முழுவதும் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.  அவர்கள் பணி செய்யும் பகுதிகளில பல்வேறு துஸ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

குறிப்பாக கிசாலினியின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்ட வேண்டும்.

மேலும்  சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற தரகர்களுக்கும் கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த கையெழுத்து பிரதிகள், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.