வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி!
இரத்தினபுரி – பலங்கொடை தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று பகல் தப்பியோடியுள்ளார்.
அவிசாவளை – கொஸ்ஹேன்கம, ஹேவாயின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நந்தசிறி போவத்த என்ற 72 வயது நபரே இவ்வாறு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு உரித்தான பகுதியில் இருந்தபோது கோவிட் தொற்று உறுதியாகியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தப்பியோடியவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை