இலங்கைக்கான சீனத் தூதுவர்- சபாநாயகர் சந்திப்பு!!

 


இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை  சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு, முழுமையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என  சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதாரம், நிதி ஒத்துழைப்பு மற்றும் நாடாளுமன்ற நட்புறவை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற ரீதியில் சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.