அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறந்தது என பரிசுத்த பாப்பரசர்
கொடிய தொற்றை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறந்தது என பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் 1.2 பில்லியன் கத்தோலிக்கர்கள் இணைய உள்ள நிலையில் பரிசுத்த பாப்பரசர் இவ்வாறு கோரியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த பெருந்தொற்றை அடியோடு ஒழிக்க முடியும் என்றும் பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸினால் வட,மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடியோ ஒளிப்பதிவு ஒன்றின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது என்பது அன்பின் அடையாளம் என தெரிவித்துள்ளார்.ஒருவரை நேசியுங்கள்,ஒருவருடைய குடும்பத்தை நேசியுங்கள்,நண்பரை நேசியுங்கள்அனைத்து மக்கi;ளயும் நேசியுங்கள்.அதற்கு அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவெடுத்த கொரோனா வைரஸ் பல திரிபுகளாகி 4370427 பேரை இன்று காவுக்கொண்டுள்ளது.
வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில் தடுப்பூசிகள் மீதும் அரசாங்கம் மற்றும் மருந்தகங்கள் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை