காபூலில் மூன்றாவது குண்டு வெடிப்பு! 60 பேர் உயிரிழப்பு

 


காபூலில் நகரில் 3 ஆவது குண்டு வெடிப்புச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறைந்தது 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தலிபான்கள் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் – காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாமென அமெரிக்கா எச்சரித்த சில மணி நேரத்திலேயே காபூல் விமான நிலைய வாயில் பகுதியில் அடுத்தடுத்து இரு தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்த நிலையில் சற்றுமுன் 3 ஆவது குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சர்வதேச ஊடக தகவல்படி இதுவரை 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் பலியானதுடன் 140 பேர் படுகாயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


6.30 மணியளவில் விமான நிலைய வாயிலில் முதலாவது குண்டு தாக்குதலும் 7.30 மணியளவில் விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் இரண்டாவது தாக்குதலும் சற்று முன்னர் மூன்றாவது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.


(ISIS பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.