அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு!


 பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை அடுத்து ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ஆப்கானிஸ்தான் நிலைவரம் குறித்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களிடம் எடுத்துரைக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கூடுதல் தகவல்களை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவிப்பார்’ எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து பிரஹலாத் ஜோஷி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல் குறித்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கூட்டத்திற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.