அவசரத்தால் ஏற்பட்ட விபத்து- ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!!

 


பணிக்கு செல்வதற்கான பேருந்தை தவறவிட்டதால் அந்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ளான சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் திரியாய் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் யுவதியொருவர் பலியானதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மஹதிவுல்வெவ - மயிலகுடாவ பகுதியை சேர்ந்த கயானி மதுசானி (21 வயது) என்ற யுவதியே உயிரிழந்துள்ளதுடன், அவரது நண்பி படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் யுவதியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.