முச்சக்கரவண்டி விபத்து - 5 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாப பலி!
பாதுக்க – கொடகம வீதியில் வடரெக்க சந்தியில் லொறியுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி , அதில் பயணித்த 5 மாத பெண் குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தின்போது குழந்தையின் தாயாரும் முச்சக்கர வண்டியில் இருந்த நிலையில் , படுகாயமடைந்த அவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் லொறி சாரதியை கைது செய்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை