ஐடா சூறாவளியால் அமெரிக்காவில் ஏற்பட்ட பாதிப்பு!!
அமெரிக்காவின் லூசியானாவில் ஐடா சூறாவளி தாக்கியதால், 750,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு தடைப்பட்டுள்ளது.
ஜெனரேட்டர்கள் மட்டுமே வேலை செய்யும் நிலையில், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருளில் மூழ்கியுள்ளது.
சென்ற வார இறுதியில் மெக்ஸிக்கோ வளைகுடாவில் உருவான ஐடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 150MPH (240 கிமீஃமணி) காற்று வீசியது மற்றும் தப்பி ஓடாத மக்கள் அந்த இடத்தில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே பேடன் ரூஜ் பகுதியில், அசென்ஷன் பாரிஷில் உள்ள வீடு மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் கத்ரீனா சூறாவளி 2005ஆம் ஆண்டு கத்ரினா சூறாவளி தாக்கியபொழுது சுமார் 1800பேர் உயிரிழந்தனர்.
அதன்பின்பு அங்கு வெள்ளப் பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அந்தக் கட்டமைப்புகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பது ஐடா சூறாவளி கடக்கும்போது தெரியும். ஐடா கத்ரீனாவை விடவும் வலுவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளுக்கு அப்பாலும் பெரிய பேரழிவை உண்டாக்கக்கூடிய உயிர் அச்சுறுத்தலாக ஐடா சூறாவளி இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
சில இடங்களில் புயலின் தாக்கம் 16 அடி (4.8 மீ) வரை இருக்கும். இது தாழ்வான கடற்கரையின் சில பகுதிகளை மூழ்கடிக்கும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை