இரண்டு மாணவ சங்க தலைவர்கள் கைது!

 


கடந்த மூன்றாம் திகதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவ சங்க தலைவர்கள் உட்பட பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைகழகங்களிற்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவையும்,ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தின் மாணவர் சம்மேளனத்தின் தலைவர் அமில சந்தீபவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து வந்த மூன்று வான்சாரதிகளும் தலங்கம பொலிஸாரால்   கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.