மேலும் 1,958 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைவு!!


 இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,958 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 11 ஆயிரத்து 349 ஆக பதிவாகியுள்ளது.

அதில் 25,973 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்ற அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,508 ஆக உயர்ந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.