உகண்டாவில் கொவிட் பரவல் அதிகம்!!
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் வைரஸ் தொற்றினால், மொத்தமாக மூவாயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 103ஆவது நாடாக விளங்கும் உகண்டாவில் மொத்தமாக ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 825பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 93பேர் பாதிக்கப்பட்டதோடு 15பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 21ஆயிரத்து 312பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 356பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 95ஆயிரத்து 507பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை