திருமலையில் பிரபல சட்டத்தரணி கொரோனாவுக்குப் பலி!!

 


திருகோணமலையில் உள்ள சட்டத்தரணிகளின் மத்தியில், தமிழ்த்தேசிய உணர்வும், ஆளுமையும், கடவுள் பக்தியும் நிறைந்த சட்டத்தரணிகளில் ஒருவராகத் திகழ்ந்த திரு.கலியுகவரதன் பாலமுருகா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா என்ற வைரஸினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரது இறுதிக்கிரிகைகள் பொலநறுவையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் மறைவு திருகோணமலை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை அன்னாரது மனைவி திருமதி.சந்திரவதனி ஒரு வைத்தியர் என்பதுடன் சென்ற வருடம் அவர் கிழக்கு மாகாண சுகாதார பணிமனையில் கொரோனா தொடர்பான தகவல் வழங்கும் பிரிவில் கடமையாற்றினார்.

அதன்பின்னர் இவ் வருடம் இடமாற்றலாகி தற்பொழுது அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.