வர்ணம் தீட்ட சுவரில் ஏறியவர் பரிதாப பலி!!

 


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுவற்றிற்கு வர்ணம் தீட்டியவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை அனுராதபுரம் சந்திப்பகுதியில் அமைந்துள்ள கட்டிமொன்றில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கத்திற்குள்ளாகியுள்ளார்.

உயர் மின்னழுத்த மின்கம்பிக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட கட்டிடமொன்றில் மேல் தளத்தில் வர்ணம் தீட்டும் நடவடிக்கையில் குறித்த நபர் ஈடுபட்டிருந்த நிலையில் மின்சாரம் தாக்கியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.