யேர்மனியில் மூன்றாவது தடவையாக 'தமிழர் தெருவிழா'அனைவரும் வருக!
யேர்மனியில் மூன்றாவது தடவையாக 'தமிழர் தெருவிழா' நடைபெறுகிறது. இம்முறை சற்றுப் பெரிய இடத்தில் டோட்முண்டின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் விழா நடைபெறுகிறது.
யேர்மனியில் 60 வீதம் அளவிலானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதனால் ஏற்பட்டிருக்கும் தளர்வுகள் 'தமிழர் தெருவிழாவை' சாத்தியம் ஆக்கியிருக்கின்றன. திறந்த வெளியில் விழா நடைபெறுவதால் தமிழர் தெருவிழாவில் கலந்து கொள்வதற்கு தடுப்பூசி போட்டிருக்கவோ, கொரோனா பரிசோதனை செய்திருக்க செய்திருக்கவோ வேண்டியதில்லை. அனைவரும் கலந்து கொள்ள முடியும்.
இதுவரை தடுப்பூசி போடாதவர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் மண்டபங்களிலும் எதிர்காலத்தில் இது போன்று கட்டுப்பாடுகள் இன்றி பெரும் விழாக்களை நாம் செய்ய முடியும்.
தமிழர் தெருவிழாவிற்கு அனைவரும் வருக!
கருத்துகள் இல்லை