முகநூல் நட்பால் வந்த விபரீதம்!!

 


முகநூல் நண்பியை வீட்டிற்கு அழைத்ததால் வீட்டில் இருந்த தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று கொட்டுகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இந்நிலையில் முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்தி திருட்டில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில 24 வயதான பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

முகனூலூடாக சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது யுவதியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட சந்தேகநபர், அந்த யுவதியின் வீட்டுக்கு இரண்டு தடவைகள் சென்றுவந்துள்ளார். இந்நிலையில் குறித்த இரண்டு தடவைகளுயும் யுவதியின் வீட்டிலிருந்த தங்கநகைகளைத் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இறுதியாக நேற்றுமுன்தினம் யுவதியின் வீட்டுக்குச் சென்ற சந்தேகநபர், சுமார் மூன்றரைப் பவுன் தங்கநகைகளைத் திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.