மரணவீட்டில் கலந்துகொண்டவர்களுக்கு யாழில் திடீர் சுகயீனம்!!

 


யாழ்.நயினாதீவில் மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில், கடந்த திங்கள் கிழமை நயினாதீவில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய மரணச் சடங்கில் கிராம மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மரணச்சடங்கிற்கு மறுநாளே உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த சம்பவத்தினை அடுத்து மரணச்சடங்களில் பங்கேற்றவர்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் என கிராமத்து மக்கள் மத்தியில் கொரோனா அச்ச நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை உயிரிழப்பவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதியான பின்னர் மட்டுமே சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமுலில் உள்ளபோதும் யாழ்.தீவகத்தில் இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.