சிக்கியது முக்கிய ஆதாரம்!!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக அவர் தங்கியிருந்த வீட்டில் முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, 'என் சாவுக்கு காரணம்' என தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழவினரால் மீண்டும் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், டயகம சிருமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இதுவரை, 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை