கிஷாலினி மரணம்- கருத்துகளால் விசாரணை தாமதம்!!

 


ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சிறுமியின் மரணம் தொடர்பான தகவல்கள் விசாரணைகளைத் தடுப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.