சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளைஞன் உயிரிழப்பு!

 


முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் முல்லைத்தீவில் விசுவமடு நகர்பகுதியில் கடந்த 29.07.2021 அன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தின் போது படுகாயமடைந்த 19 வயதையுடைய இளைஞன், யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

விசுவமடு மாணிக்கபுரத்தினை சேர்ந்த 19 அகவையுடைய சசிக்குமார் தனோஜிகன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் குறித்த இளைஞன் கடந்த 29.07.2021 அன்று உந்துருளியில் பயணித்த போது ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனை அடுத்து, இளைஞன் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பு பொலிசாரால் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.