கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – மு.க.ஸ்டாலின்!!

 


கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக வரவுசெலவுக் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிலையில், இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்துள்ளோம்.

அரசியல் நோக்கம் இல்லாமல் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுதான் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பழிவாங்கும் செயல் இல்லை. உரிய விசாரணை நடைபெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். வேறு யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த அரசு சட்டத்தின் ஆட்சியை நடத்தும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.