நாட்டின் முடக்கம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு வெளியானது!!


 கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது. எனினும் நாட்டை முடக்குவது குறித்து எந்ததொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு  முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கொவிட் கட்டுப்பாட்டு செயலணியுடன் ஜனாதிபதி, கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

குறித்த கலந்துரையாடல் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் நாட்டை முழுமையாக முடக்குமாறும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் சுகாதார பிரிவினர் தொடர்ச்சியாக அரசாங்கத்தை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.