நாட்டை முழுமையாக முடக்குவது இறுதியாகவே செய்யப்படும்!!

 


நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.

முழுமையாக ஊரடங்கை பிறப்பிக்க அரசாங்கத்திடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் மிகவும் அத்தியாவசிய நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து, பயணக் கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படலாம்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.