குடும்பத் தகராறில் ஆணொருவர் பலி!!
யாழில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் நள்ளிரவு 12.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு கொண்டுசென்ற போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை