பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு!!


மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பகிறது.

அத்தோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் , கூட்டம் நடைபெற்றபோது திடீரென வெடித்த வெடிகுண்டால் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், மீட்புக் குழுக்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை வைத்திசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.