ஆரம்பமே மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாற்றம்!

 


மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் களத்தில் போனர் 18 ஓட்டங்களுடனும் அல்சார்ரி ஜோசப் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 263 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ஜமைக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 302 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பவாட் அலாம் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களையும் பாபர் அசாம் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேஸன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளான இன்று மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.