இலங்கை அமைச்சர் பவித்ராவின் கணவர் மருத்துவமனையில் அனுமதி!!

 


போக்குவரத்து அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சியின் கணவராகிய காஞ்சன ஜயரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குள்ளான அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பவித்ராவின் கணவரான காஞ்சன ஜயசேகர சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதோடு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தனிப்பட்ட செயலாளரும் ஆவார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.