பணமொன்றே வாழ்வாகா!!
பெரும்சொத்து பணமன்று வீடு மன்று பெயர்சொல்ல வாங்குகின்ற நிலமு மன்று
அரும்பாடு பட்டவற்றைச் சேர்த்த போதும்
அதுவெளியே சொல்லாமல் ஓடிப் போகும் !
இருக்கின்ற போததனை அனுப வித்தும்
இன்பமாக வாழ்வுதனை நடத்து தற்கும்
அரும்உடலோ நோயின்றி இருக்க வேண்டும்
அறுசுவையில் உணும்நிலையும் நமக்கு வேண்டும் !
பணத்தோடே இனிப்புநோயும் சேர்ந்தி ருந்தால்
பணந்தன்னை வேடிக்கை பார்ப்ப தன்றி
உணவுண்ண இயலாது பழங்க ளையும்
உண்ணுதற்கு முடியாமல் ஏங்க வேண்டும் !
பணத்துடனே இரத்தழுத்த நோயும் வந்தால்
பசியடக்க உப்பில்லா சோறு தானே
கணக்கின்றிச் செல்வந்தான் இருந்த போதும்
கவலையின்றி இருந்தால்தான் வாழ்வி னிக்கும் !
போதுமென்ற மனமில்லாப் போது வெற்பாய்ப்
பொருள்வீட்டுள் இருந்தபோதும் அமைதி தாரா
ஊதுகின்ற பலூனைப்போல் பெருக்கு தற்கே
உடல்மனத்தின் செயலிருந்தால் பயனே இல்லை !
ஏதுமின்றிப் பதவிபணம் எதுவு மின்றி
எழில்மனமும் கொடைப்பண்பும் இருந்தால் போதும்
மோதுபவர் எவருமின்றி மதிப்பு யர்ந்து
மொத்தத்தில் வாழ்வினிலே மகிழ்ச்சி துள்ளும்!
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை